Sunday, June 19, 2011

முன்னோடிப்பயிற்சி

சாரணர் சம்மந்தப்பட்ட முன்னோடிப்பயிற்சி பருத்தித்துறை மாவட்டத்தினால் 
18 -19.06.2011   ஆகிய தினங்களில் யா/ தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயத்தில் மாவட்ட சாரண ஆணையாளர் திரு .மு.இரவீந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இப் பயிற்சியானது வருடத்தில் ஒருமுறை நடைபெறும் . இவ்வருடம் இப் பயிற்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இவ்வருடம் இப் பயிற்சியில் ஆண் சாரணர்களும் பெண் சாரணர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும். இப் பயிற்சியில் மொத்தமாக 85 சாரண மாணவர்கள் கந்துகொண்டனர். மேலும் இப்  பயிற்சிக்கு வளவாளர்களாக திரு ந.மகேந்திரராஜா அவர்களும் திரு பொ.ரஞ்சனதேவர் அவர்களும் திரு செ.ரவிக்குமார் அவர்களும் திரு கோ. செல்வவிநாயகம் அவர்களும் கலந்துகொண்டு பயிற்சி சிறப்புற வழி சமைத்தனர். மேலும் யா/ தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலய அதிபர் திரு இரா.ஸ்ரீ நடராஜா அவர்கள் பலவகையிலும் உதவிகள் புரிந்தார்.





பயிற்சியில் சாரண மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கையேட்டு நிழற்படங்களை இந்த இணையத்தளத்தில் பிரசுரிப்பதற்கு அனுமதியினை தந்துதவிய மாவட்ட சாரண ஆணையாளர் திரு .மு.இரவீந்திரன் அவர்களுக்கும், திரு கு.கி.சிவகடாட்சம் செந்தூரன் அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றோம் 































 நிழற்படங்கள் -  திரு கு.கி.சிவகடாட்சம் செந்தூரன் (K.K.S.S)






No comments:

Post a Comment